search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
    X

    நத்தம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

    நத்தம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நத்தம்:

    நத்தம் அருகே கரந்தமலையில் மலையடிவாரத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள கிலுவை மரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது பற்றி உலுப்பகுடி கிராம நிர்வாக அலுவலர் கொண்டல் ராஜ் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் உடலை கைபற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இந்த முடிவை எடுத்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×