search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே வேன் மோதி விவசாயி பலி
    X

    வேதாரண்யம் அருகே வேன் மோதி விவசாயி பலி

    வேதாரண்யம் அருகே வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65) விவசாயி. இவர் நேற்று கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு மாவடிவாய்க்கால் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பொன்னுசாமியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து பொன்னுசாமியின் மகன் ரவிச்சந்திரன் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×