என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிடிவி. தினகரனை டெல்லி போலீஸ் கைது செய்ததா?: எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி கேள்வி
Byமாலை மலர்24 April 2017 10:24 AM GMT (Updated: 24 April 2017 10:24 AM GMT)
டிடிவி. தினகரனை டெல்லி போலீசார் கைது செய்துவிட்டனரா? என்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
சென்னை:
சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரனின் வக்கீல் ஆஜராகி, ‘டெல்லி போலீசார் பதிவு செய்த ஒரு கிரிமினல் வழக்கின் விசாரணைக்காக டி.டி.வி. தினகரன் டெல்லி சென்றுள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கூறினார்.
அதற்கு நீதிபதி, ‘அந்த வழக்கில் டி.வி.வி. தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து விட்டனரா?’ என்று கேட்டார். ‘கைது எதுவும் செய்யப்படவில்லை. அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தினகரனிடம் விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர்’ என்று வக்கீல் பதிலளித்தார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ‘ஒருவேளை தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டால், அந்த தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும்’ என்று கூறினார்.
பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற 27ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று டி.டி.வி. தினகரன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரனின் வக்கீல் ஆஜராகி, ‘டெல்லி போலீசார் பதிவு செய்த ஒரு கிரிமினல் வழக்கின் விசாரணைக்காக டி.டி.வி. தினகரன் டெல்லி சென்றுள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கூறினார்.
அதற்கு நீதிபதி, ‘அந்த வழக்கில் டி.வி.வி. தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து விட்டனரா?’ என்று கேட்டார். ‘கைது எதுவும் செய்யப்படவில்லை. அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தினகரனிடம் விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர்’ என்று வக்கீல் பதிலளித்தார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ‘ஒருவேளை தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டால், அந்த தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும்’ என்று கூறினார்.
பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற 27ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று டி.டி.வி. தினகரன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X