என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இணைப்பு முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை
Byமாலை மலர்24 April 2017 10:05 AM GMT (Updated: 24 April 2017 10:05 AM GMT)
அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இன்று நடக்கிறது.
ஓ . பன்னீர்செல்வம் அணியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியையும் இணைக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது.
இந்த நிலையில் இணைப்பு முயற்சி தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செய்தி தொடர்பாளரான, வைகை செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். ஓ.பி.எஸ். அணியினர் விதிக்கும் நிபந்தனை தொடர்பாக அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி விவாதித்தார்.
அமைச்சர்கள் பதவி, கட்சி பதவிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதே போல ஓ. பன்னீர் செல்வமும் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வீனஸ் காலனியில் உள்ள தனது இல்லத்தில் அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் பற்றி ஓ. பன்னீர்செல்வம் ஆலோசித்தார்.
அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இன்று நடக்கிறது.
ஓ . பன்னீர்செல்வம் அணியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியையும் இணைக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது.
இந்த நிலையில் இணைப்பு முயற்சி தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செய்தி தொடர்பாளரான, வைகை செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். ஓ.பி.எஸ். அணியினர் விதிக்கும் நிபந்தனை தொடர்பாக அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி விவாதித்தார்.
அமைச்சர்கள் பதவி, கட்சி பதவிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதே போல ஓ. பன்னீர் செல்வமும் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வீனஸ் காலனியில் உள்ள தனது இல்லத்தில் அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் பற்றி ஓ. பன்னீர்செல்வம் ஆலோசித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X