search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நங்கவள்ளியில் வாலிபர் அடித்து கொலை
    X

    நங்கவள்ளியில் வாலிபர் அடித்து கொலை

    நங்கவள்ளியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேச்சேரி:

    சேலம் அருகே உள்ள நங்கவள்ளி, தோப்பு தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் நங்கவள்ளியில் சைக்கிள்கள் பழுத்து பார்க்கும் கடை வைத்துள்ளார்.

    இவரது மகன் சரவணன் (வயது 33). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், சந்தியா (8), வினோத் (6), கவின்(3) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

    நேற்று இரவு வழக்கம் போல் சரவணன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது லாவண்யா ஏன் இப்படி தினமும் மது குடித்து விட்டு வருகிறீர்கள்? சம்பாதிக்கும் பணத்தை இப்படி குடித்து விட்டு வந்தால் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது? என கூறி சரவணனை கண்டித்தார்.

    இதனால் 2 பேருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த சரவணன் இரும்பு கம்பியை எடுத்து வந்து லாவண்யாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் லாவண்யா தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை சரவணன் நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் பின்புறம் முத்து முனியப்பன் சிலை அருகில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பல்வேறு இடங்களில் அடித்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

    இவரை யாரோ மர்ம நபர்கள் வெறித்தனமாக அடித்து கொன்று இங்கு வீசி விட்டு சென்று இருக்கிறார்கள்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நங்கவள்ளி போலீசார், சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவர் கொலை செய்யப்பட்ட தகவல் மேட்டூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மனைவி லாவண்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது. சரவணன் எதற்காக கொலை செய்யப்பட்டார் ? என்பதும், அவரை கொலை செய்த மர்ம கும்பல் யார்? என்பதும் மர்மமாகவே உள்ளது.

    மர்ம கும்பலை கண்டுபிடித்து கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற் கொண்டால் தான் கொலைக்கான முழு காரணங்களும் வெளியே தெரியவரும்.

    Next Story
    ×