என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல்: புதுவையிலும் இன்று வாக்குப்பதிவு
Byமாலை மலர்23 April 2017 6:41 AM GMT (Updated: 23 April 2017 6:50 AM GMT)
புதுவையிலும் பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 1954-ம் ஆண்டு புதுவை சுதந்திரம் அடைந்தது. அப்போது வசித்த புதுவை மக்கள் பலருக்கு பிரான்ஸ் நாடு குடியுரிமை வழங்கியது. இந்த மக்கள் பிரான்ஸ் மற்றும் இந்திய ஆகிய இரு நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு பிரான்சில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குரிமை பெற்றவர்கள் புதுவையில் தற்போது உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல் இன்று நடந்தது. அதில் அவர்கள் வாக்களித்தனர்.
இத்தேர்தலில் பிராங்கோயிஸ் பைலான், பெனாய்ட் ஹாமன், மரைன் லி பென், இம்மானுவேல் மக்ரான், ஜீன் லக் மெலன்சினான் உள்ளிட்ட 5 முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது.
இத்தேர்தலில் புதுவையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்துக்குட்பட்ட புதுவை, தமிழகம், கேரளம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் பகுதிகளில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக 6 மையங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுவை துணை தூதரகம், அலையன்ஸ் பிரான்சிஸ் வளாகத்தில் தலா 2 மையங்களும், காரைக்கால், சென்னையில் தலா ஒரு மையமும் அமைக் கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் முதல் 2 இடம் பெறும் வேட்பாளர்களில் அதிபரை நிர்ணயிப்பதற்கான 2-ம் சுற்று வாக்குப்பதிவு வருகிற 7-ந் தேதி நடைபெறும்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 1954-ம் ஆண்டு புதுவை சுதந்திரம் அடைந்தது. அப்போது வசித்த புதுவை மக்கள் பலருக்கு பிரான்ஸ் நாடு குடியுரிமை வழங்கியது. இந்த மக்கள் பிரான்ஸ் மற்றும் இந்திய ஆகிய இரு நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு பிரான்சில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குரிமை பெற்றவர்கள் புதுவையில் தற்போது உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல் இன்று நடந்தது. அதில் அவர்கள் வாக்களித்தனர்.
இத்தேர்தலில் பிராங்கோயிஸ் பைலான், பெனாய்ட் ஹாமன், மரைன் லி பென், இம்மானுவேல் மக்ரான், ஜீன் லக் மெலன்சினான் உள்ளிட்ட 5 முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது.
இத்தேர்தலில் புதுவையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்துக்குட்பட்ட புதுவை, தமிழகம், கேரளம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் பகுதிகளில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக 6 மையங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுவை துணை தூதரகம், அலையன்ஸ் பிரான்சிஸ் வளாகத்தில் தலா 2 மையங்களும், காரைக்கால், சென்னையில் தலா ஒரு மையமும் அமைக் கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் முதல் 2 இடம் பெறும் வேட்பாளர்களில் அதிபரை நிர்ணயிப்பதற்கான 2-ம் சுற்று வாக்குப்பதிவு வருகிற 7-ந் தேதி நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X