search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தூர் அருகே குழந்தையை விற்றதாக புகார்: தாய் உள்பட 3 பெண்கள் மீது வழக்கு
    X

    சாத்தூர் அருகே குழந்தையை விற்றதாக புகார்: தாய் உள்பட 3 பெண்கள் மீது வழக்கு

    குழந்தையை விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் தாய் உள்பட 3 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது35). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தனது சகோதரி சாந்தியிடம் குழந்தையை தத்து எடுத்து தருமாறு ரூ.1 லட்சத்தை தமிழ்ச்செல்வி கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் மேட்டமலையை சேர்ந்த நாகபாண்டி மனைவி சண்முகத்தாய் (36) கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனக்கு பிறந்த 2-வது பெண் குழந்தையை தமிழ்ச்செல்வியிடம் கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக சாந்தி மற்றும் தமிழ்ச்செல்வி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் சண்முகத்தாயிடம் தமிழ்ச் செல்வி குழந்தையை வாங்கியது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பில் சாந்தி புகார் கொடுத்தார்.

    இதனை தொடர்ந்து குழந்தை மீட்டகப்பட்டு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சாந்தி, தமிழ்ச்செல்வி, சண்முகத்தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×