என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே குழந்தையை விற்றதாக புகார்: தாய் உள்பட 3 பெண்கள் மீது வழக்கு
Byமாலை மலர்22 April 2017 2:34 PM GMT (Updated: 22 April 2017 2:34 PM GMT)
குழந்தையை விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் தாய் உள்பட 3 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது35). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தனது சகோதரி சாந்தியிடம் குழந்தையை தத்து எடுத்து தருமாறு ரூ.1 லட்சத்தை தமிழ்ச்செல்வி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மேட்டமலையை சேர்ந்த நாகபாண்டி மனைவி சண்முகத்தாய் (36) கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனக்கு பிறந்த 2-வது பெண் குழந்தையை தமிழ்ச்செல்வியிடம் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சாந்தி மற்றும் தமிழ்ச்செல்வி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் சண்முகத்தாயிடம் தமிழ்ச் செல்வி குழந்தையை வாங்கியது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பில் சாந்தி புகார் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து குழந்தை மீட்டகப்பட்டு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சாந்தி, தமிழ்ச்செல்வி, சண்முகத்தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது35). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தனது சகோதரி சாந்தியிடம் குழந்தையை தத்து எடுத்து தருமாறு ரூ.1 லட்சத்தை தமிழ்ச்செல்வி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மேட்டமலையை சேர்ந்த நாகபாண்டி மனைவி சண்முகத்தாய் (36) கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனக்கு பிறந்த 2-வது பெண் குழந்தையை தமிழ்ச்செல்வியிடம் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சாந்தி மற்றும் தமிழ்ச்செல்வி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் சண்முகத்தாயிடம் தமிழ்ச் செல்வி குழந்தையை வாங்கியது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பில் சாந்தி புகார் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து குழந்தை மீட்டகப்பட்டு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சாந்தி, தமிழ்ச்செல்வி, சண்முகத்தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X