search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே சுண்ணாம்பு ஆலை ஊழியருக்கு கொலை மிரட்டல்
    X

    நெல்லை அருகே சுண்ணாம்பு ஆலை ஊழியருக்கு கொலை மிரட்டல்

    நெல்லை அருகே சுண்ணாம்பு ஆலை ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி பகுதியில் ஒரு சுண்ணாம்பு ஆலை உள்ளது. இதில் நெல்லையை சேர்ந்த இப்ராகிம் என்பவர் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் ஆலையில் வைத்து ஜெயிலுக்கு சென்றவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என பேசினாராம். அப்போது அங்கு வந்த மதவக்குறிச்சியை சேர்ந்த செல்லப்பா(வயது47) உள்ளிட்ட 3 பேர் இப்ராகிமிடம் தகராறு செய்தனர். மேலும் அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.

    இதுபற்றி இப்ராகிம் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பா உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×