search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டையார்பேட்டையில் பைக்கில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி விட்டு நகை பறிப்பு
    X

    தண்டையார்பேட்டையில் பைக்கில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி விட்டு நகை பறிப்பு

    தண்டையார்பேட்டையில் பைக்கில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி விட்டு நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி விஜய லட்சுமி. மகள் அஸ்மிதா.

    இவர்கள் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் புது வண்ணாரப்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பினார்.

    தண்டையார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் முன்னால் பைக்கில் சென்ற விஜயலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றனர்.

    அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி நகையை பிடித்துக் கொண்டார். இதில் நிலை தடுமாறி ஆனந்த்ராஜ், விஜயலட்சுமி, அஸ்மிதா மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

    கொள்ளையர்கள் 1½ பவுன் நகையுடன் தப்பி விட்டனர். கீழே விழுந்ததில் விஜயலட்சுமி, அஸ்மிதா ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×