என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டையார்பேட்டையில் பைக்கில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி விட்டு நகை பறிப்பு
Byமாலை மலர்22 April 2017 9:07 AM GMT (Updated: 22 April 2017 9:07 AM GMT)
தண்டையார்பேட்டையில் பைக்கில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி விட்டு நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி விஜய லட்சுமி. மகள் அஸ்மிதா.
இவர்கள் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் புது வண்ணாரப்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பினார்.
தண்டையார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் முன்னால் பைக்கில் சென்ற விஜயலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றனர்.
அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி நகையை பிடித்துக் கொண்டார். இதில் நிலை தடுமாறி ஆனந்த்ராஜ், விஜயலட்சுமி, அஸ்மிதா மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
கொள்ளையர்கள் 1½ பவுன் நகையுடன் தப்பி விட்டனர். கீழே விழுந்ததில் விஜயலட்சுமி, அஸ்மிதா ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X