search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை மாவட்டத்தில் 3 மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்
    X

    சிவகங்கை மாவட்டத்தில் 3 மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்

    சிவகங்கை மாவட்டத்தில் 3 மாணவிகள் உள்பட 4 பேர் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சோம சுந்தரம் நகரை சேர்ந்தவர் தணிகைமுருகன். இவரது மகள் பவித்ரா (வயது 19).

    தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 19-ந்தேதி வேலைக்குச் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பாததால், காளையார்கோவில் போலீசில் தணிகை முருகன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்புவனம் தாலுகா மேலவெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் வினோதினி (17) பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ள இவர், கடந்த 19-ந் தேதி திருப்புவனம் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார்.

    அதன்பிறகு அவர் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால் திருப்புவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மானாமதுரை தாலுகா ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகள் சவுந்தர்யா (17) பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ள இவரும் 17-ந்தேதி முதல் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    திருப்பாச்சேத்தி அருகே உள்ள பொத்தன்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கலைச்செல்வி (17) பிளஸ்-2 மாணவி நேற்று வீட்டில் இருந்து வெளியேசென்ற இவர், அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மாயமான கலைச் செல்வியை தேடி வருகிறார்.

    Next Story
    ×