search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. இணைப்பு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும்: ஓ.பி.எஸ் அணி
    X

    அ.தி.மு.க. இணைப்பு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும்: ஓ.பி.எஸ் அணி

    அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. அணிகளை இணைப்பதற்கு நடந்த முயற்சியில் இரு அணிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கொடுத்த பேட்டிகளால் சர்ச்சை எழுந்ததால் பேச்சு வார்த்தை தொடங்கும் முன்பே முட்டுக்கட்டை விழுந்து விட்டது.

    இதனையடுத்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்று பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

    கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமி, தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

    பின்னர் பேசிய ஓ.பி.எஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன், பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்குமாறு அதிமுக அம்மா அணியிடம் இருந்து முறையான அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இன்று இரவுக்குள் தங்கள் அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்றார்.



    நேற்று கே.பி.முனுசாமி மற்றும் ஜெயக்குமார் அளித்த பேட்டிகளால் இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பெரிய முட்டுக்கட்டை விழுந்த நிலையில், தற்போது மீண்டும் சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
    Next Story
    ×