என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்20 April 2017 11:45 AM GMT (Updated: 20 April 2017 11:45 AM GMT)
புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை:
விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சங்கர், தலைவர் துரைச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் வீராச்சாமி, ரத்தினவேல், தங்கவேல், அன்பழகன், பால சுந்தரமூர்த்தி, முகமதுகனி, அய்யாவு, ரஜினி, தர்மராஜ், கோபால்சாமி, மணிவேல், பழனியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்,
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு, உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு, விவசாயத் தொழிலாளர்களின் வேலை இழப்பிற்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரிகுளங்களைத் தூர்வாரி நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சங்கர், தலைவர் துரைச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் வீராச்சாமி, ரத்தினவேல், தங்கவேல், அன்பழகன், பால சுந்தரமூர்த்தி, முகமதுகனி, அய்யாவு, ரஜினி, தர்மராஜ், கோபால்சாமி, மணிவேல், பழனியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்,
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு, உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு, விவசாயத் தொழிலாளர்களின் வேலை இழப்பிற்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரிகுளங்களைத் தூர்வாரி நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X