என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 7 பேருக்கு ஒரே நாளில் நவீன இருதய சிகிச்சை
Byமாலை மலர்20 April 2017 10:30 AM GMT (Updated: 20 April 2017 10:30 AM GMT)
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2½ வயது சிறுவன் உள்பட 7 பேருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இருதய சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
ராயபுரம்:
தண்டையார்பேட்டையை சேர்ந்த 2½ வயது சிறுவன் இம்மானுவேல். இருதயத்தில் ஓட்டையால் பாதிக்கப்பட்டு இருந்தான்.
இதேபோல் நத்தத்தை சேர்ந்த கன்னியப்பன், அடையாறு பானுமதி, கொளத்தூர் உமாமகேஸ்வரி, வியாசார்பாடி சாமூண்டீஸ்வரி, காஞ்சீபுரம் உதயகுமார் உள்ளிட்ட 6 பேரும் இதய ஓட்டையால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சிறுவன் இம்மானுவேல் உள்பட 7 பேருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இருதய சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இருதய அறுவை சிகிச்சை பேராசிரியர்கள், டாக்டர்கள் கண்ணன், மூர்த்தி ஆகியோர் தலைமையில் நவீன முறையில் 7 பேருக்கும் இருதய சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறும்போது, இருதய கோளாறுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இந்த 7 பேருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இன்றி ‘கேத் லேப்’ என்ற நவீன முறையில் இருதய சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது’’ என்றார். அப்போது நிலைய அலுவலர் ரமேஷ் உடன் இருந்தார்.
தண்டையார்பேட்டையை சேர்ந்த 2½ வயது சிறுவன் இம்மானுவேல். இருதயத்தில் ஓட்டையால் பாதிக்கப்பட்டு இருந்தான்.
இதேபோல் நத்தத்தை சேர்ந்த கன்னியப்பன், அடையாறு பானுமதி, கொளத்தூர் உமாமகேஸ்வரி, வியாசார்பாடி சாமூண்டீஸ்வரி, காஞ்சீபுரம் உதயகுமார் உள்ளிட்ட 6 பேரும் இதய ஓட்டையால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சிறுவன் இம்மானுவேல் உள்பட 7 பேருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இருதய சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இருதய அறுவை சிகிச்சை பேராசிரியர்கள், டாக்டர்கள் கண்ணன், மூர்த்தி ஆகியோர் தலைமையில் நவீன முறையில் 7 பேருக்கும் இருதய சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறும்போது, இருதய கோளாறுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இந்த 7 பேருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இன்றி ‘கேத் லேப்’ என்ற நவீன முறையில் இருதய சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது’’ என்றார். அப்போது நிலைய அலுவலர் ரமேஷ் உடன் இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X