search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: கவர்னருடன் ஜெயக்குமார் ஆலோசனை
    X

    மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: கவர்னருடன் ஜெயக்குமார் ஆலோசனை

    மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னருடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    கவர்னர் வித்யாசாகர் ராவை துணை சபாநாயகர் தம்பித்துரை சந்தித்து திரும்பிய பின்பு அமைச்சர் ஜெயக்குமார் சென்று சந்தித்தார். அவருடன் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்றனர்.



    மீன்வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக கவர்னருடன் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னரிடம் அரசியல் பேசவில்லை. பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.

    கவர்னரே துணைவேந்தர் பதவிக்கானவர்களை நேரில் அழைத்து, விசாரித்து 1 மணிநேரம் நேர்காணல் நடத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×