search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் 15 பவுன் நகையுடன் ஆசிரியர் பயிற்சி மாணவி மாயம்
    X

    மதுரையில் 15 பவுன் நகையுடன் ஆசிரியர் பயிற்சி மாணவி மாயம்

    15 பவுன் நகையுடன் ஆசிரியர் பயிற்சி மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    திருமங்கலம், சிந்துப்பட்டி அருகே உள்ள அழகுசிறையை சேர்ந்தவர் ஜெயக்கொடி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 22). இவர் மதுரை அருகே உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற ஐஸ்வர்யா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்போது வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள், கல்விச்சான்றிதழ் மற்றும் லேப்டாப்பை அவர் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

    இது குறித்து ஐஸ்வர்யாவின் தந்தை ஜெயக்கொடி சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், பெரியவாகைக்குளத்தைச் சேர்ந்த பால்வேன் டிரைவர் அன்னகாமன் (24) என்பவருடன் ஐஸ்வர்யா சென்றிருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×