என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாபநாசத்தில் விவசாயிடம் ரூ.2 லட்சம் பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
பாபநாசம்:
பாபநாசம் அருகே தெற்கு தெருவில் வசித்து வருபவர் சுதாகரன் (வயது 47). விவசாயி. இவர் பாபநாசத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் விவசாயக்கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை அடைப்பதற்காக நகைகளை அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் பெற்றுள்ளார்.
நேற்று காலை சுதாகரன் ஒரு பையில் ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு பணம் கட்ட சென்றார். அப்போது மேலாளர் இல்லாததால் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் பாபநாசம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் ஜூஸ் குடித்துவிட்டு மீண்டும் வடக்குமடம் வளாகம் வழியாக சீனிவாசபெருமாள் கோவில் வளைவில் திரும்பும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அவரிடம் உங்களின் பணம் கீழே கொட்டிகிடக்கிறது என்று கூறியுள்ளார்.
உடனே சுதாகரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே விழுந்த பணத்தை எடுக்கும்போது அந்த வாலிபர் அவர் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார். அந்த பையில் வங்கி பாஸ்புத்தகம், வயல்பத்திரம் நகல், வி.ஏ.ஓ. சான்றிதழ் வைத்திருந்தார். இதுகுறித்து சுதாகரன் பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்