search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் முட்புதரில் மர்மமாக இறந்து கிடந்த பெண்
    X

    திண்டுக்கல்லில் முட்புதரில் மர்மமாக இறந்து கிடந்த பெண்

    திண்டுக்கல்லில் முட்புதரில் மர்மமாக இறந்து கிடந்த பெண் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரண்மனைகுளம் பகுதியில் உள்ள முட்புதரில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக நகர் தெற்கு போலீசாருக்கு புகார் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அந்த பெண் நீலநிற சேலையும், ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். இறந்து கிடந்த பெண்ணிற்கு சுமார் 40 வயது இருக்கும். ஆனால் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    இப்பகுதியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இறந்து கிடந்த பெண் வேறு பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அவர் அருகே ஒரு மருந்து பாட்டிலும் கிடந்தது. அது வி‌ஷமாக இருக்கலாம் என்று போலீசார் அந்த பாட்டிலையும் கைப்பற்றி உள்ளனர். அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து விட்டு இந்த பகுதியில் வீசி சென்றார்களா? என்று தெரியவில்லை. இறந்தவர் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    Next Story
    ×