search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை மிரட்டல் வழக்கு: ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தம்பிக்கு முன்ஜாமீன்
    X

    கொலை மிரட்டல் வழக்கு: ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தம்பிக்கு முன்ஜாமீன்

    கொலை மிரட்டல் வழக்கில் கைதான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தம்பிக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
    சென்னை:

    சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் கொலை மிரட்டல் உள்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில், பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, மகன் ரவீந்திரநாத்குமார் ஆகியோரை குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் சென்னை ஐகோர்ட்டில், முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 11-ந்தேதி விசாரித்த நீதிபதி பாஸ்கரன், முன்ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கவும், அதுவரை, மனுதாரர்கள் இருவரையும் கைது செய்யக்கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க கூடாது என்று போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் இருதரப்பு வக்கீல்களும் வாதம் செய்தனர்.

    இதை கேட்டறிந்த நீதிபதி எஸ்.பாஸ்கரன், மனுதாரர்கள் ரவீந்திரநாத்குமார், ஓ.ராஜா ஆகியோருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    Next Story
    ×