என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாளவாடி வனப்பகுதியில் கோடை மழை - நீர் நிலைகளில் தண்ணீர் ஓடியது
Byமாலை மலர்13 April 2017 12:04 PM GMT (Updated: 13 April 2017 12:04 PM GMT)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி வனப்பகுதியில் பெய்த கோடை மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் பாய்ந்து ஓடியது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. வெயில் சுட்டெரித்தாலும் மாலை 5 மணிக்கு மேல் மேகக்கூட்டங்கள் சூழ்கிறது. மழை வருவது போல் சூழ்நிலை நிலவினாலும் திடீரென அடிக்கும் சூறாவளி காற்றால் மேகக்கூட்டங்கள் கலைந்து சென்று விடுகிறது.
நேற்று மாலையும் இதே நிலை ஏற்பட்டது. எனினும் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. தாளவாடி, ஆசனூர் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதியில் ஓரளவு பரவலாக நல்ல மழை பெய்தது.
இந்த மழையால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் ஓடியது. வனப்பகுதி ‘‘ஜிலீர்’’ என காணப்பட்டது. தாளவாடி பகுதியில் நேற்று 20 மி.மீ. மழை பெய்தது.
இதேபோல் பெருந்துறை, பவானி உள்பட சில பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. பவானியில் நேற்று 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பமும் தணிந்தது.
பெருந்துறை பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காஞ்சி கோவில் அருகே சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள தொழிற்பட்டறையின் மேற்கூரைகள் பறந்தன.
மேலும் காஞ்சிகோவில் பகுதியில் 3 இடங்களில் விளைந்திருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சூறாவளி காற்றில் முறிந்தது. சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. வெயில் சுட்டெரித்தாலும் மாலை 5 மணிக்கு மேல் மேகக்கூட்டங்கள் சூழ்கிறது. மழை வருவது போல் சூழ்நிலை நிலவினாலும் திடீரென அடிக்கும் சூறாவளி காற்றால் மேகக்கூட்டங்கள் கலைந்து சென்று விடுகிறது.
நேற்று மாலையும் இதே நிலை ஏற்பட்டது. எனினும் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. தாளவாடி, ஆசனூர் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதியில் ஓரளவு பரவலாக நல்ல மழை பெய்தது.
இந்த மழையால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் ஓடியது. வனப்பகுதி ‘‘ஜிலீர்’’ என காணப்பட்டது. தாளவாடி பகுதியில் நேற்று 20 மி.மீ. மழை பெய்தது.
இதேபோல் பெருந்துறை, பவானி உள்பட சில பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. பவானியில் நேற்று 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பமும் தணிந்தது.
பெருந்துறை பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காஞ்சி கோவில் அருகே சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள தொழிற்பட்டறையின் மேற்கூரைகள் பறந்தன.
மேலும் காஞ்சிகோவில் பகுதியில் 3 இடங்களில் விளைந்திருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சூறாவளி காற்றில் முறிந்தது. சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X