search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகளுடன் இளங்கோவன் சந்திப்பு
    X

    டெல்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகளுடன் இளங்கோவன் சந்திப்பு

    டெல்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகளுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    சென்னை:

    விவசாயிகள் வங்கியில் வாங்கி உள்ள விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதமாக போராடி வருகிறார்கள்.

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டா லின், கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி, கம்யூ னிஸ்டு செயலாளர் டி.ராஜா எம்.பி. உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று டெல்லியில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்களிடம் உங்களது நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசேராமச்சந்திரன் உடன் சென்றிருந்தார்.

    Next Story
    ×