search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரியாபட்டி அருகே கல்குவாரியில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் மரணம்
    X

    காரியாபட்டி அருகே கல்குவாரியில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் மரணம்

    கல்குவாரியில் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவன் மூழ்கி பரிதாபமாக இறந்தார். உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சோலைராஜா (வயது17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    தற்போது கோடை விடுமுறை காரணமாக சோலைராஜா வீட்டில் இருந்து வந்தார். நேற்று மதியம் நண்பர்கள் 2 பேருடன் அருகில் உள்ள தோணுகால் கல்குவாரிக்கு சென்றுள்ளார். அங்கு தேங்கி கிடந்த தண்ணீரில் நண்பர்களுடன் சேர்ந்து சோலைராஜா குளித்துள்ளார்.

    அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று சிக்கியதாக தெரிகிறது. இதில் சோலை ராஜா தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே காரியாபட்டி போலீசார் மற்றும் அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.
    Next Story
    ×