search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பெண்டாட்டிக்காரர் கைது
    X

    சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பெண்டாட்டிக்காரர் கைது

    சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பெண்டாட்டிக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாபிள்ளைக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன். பெயிண்டர். மேலும், கூலி வேலையும் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் பெயிண்டர் மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி (வயது 16) ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கத்தை பயன்படுத்தி மாணவியிடம் அவர் மேலும் நெருங்கி பழக ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மணிகண்டனின் பழக்க, வழக்கங்கள் சரியில்லை என்பது பற்றி மாணவிக்கு தெரியவந்தது. அவரது நடத்தை சரியில்லை என்பதை பற்றி தெரிந்ததும் மாணவி அவருடன் பழகுவதை நிறுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் சம்பவத்தன்று மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பாலத்காரம் செய்தார்.

    இதற்கிடையே மகள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும் இது பற்றி பெற்றோர் கண்ணீர் மல்க கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தார்கள்.

    போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், கைது செய்து விடுவார்கள் என பயந்து மணிகண்டன் அந்த மாணவியை அழைத்து சென்று அவருடைய பெற்றோர் வீட்டில் விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இந்த சம்பவத்தால் மனம் உடைந்த மாணவி கழிவறைக்கு பயன்படுத்தும் பிணாயிலை எடுத்து குடித்து விட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை கண்டதும் பதறி துடித்த பெற்றோர் மகளை மீட்டு உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் பூரண நலம் அடைந்ததும் மாணவி வீட்டிற்கு திரும்பினார்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து அவரிடம் கிச்சிப்பாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் மணிகண்டனுக்கு திருமணம் ஆகி 2 மனைவிகளும், 6 குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது.

    பின்னர் கிச்சிப்பாளையம் போலீசார், அவரை சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
    Next Story
    ×