என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்5 April 2017 3:09 PM GMT (Updated: 5 April 2017 3:09 PM GMT)
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கிய சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரி காங்கிரசார் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேதராப்பட்டு:
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக காங்கிரசார் அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து காங்கிரசார் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் கூடினர். மாவட்ட நிர்வாகி பாபு சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வானுரை சேர்ந்த ஏழுமலை, காசிநாதன், விஜய ரங்கன், முன்னாள் மாநில செயலாளர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கிய சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், உயிர் இழந்த விவசாயிகளுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X