என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கனூரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்3 April 2017 10:52 AM GMT (Updated: 3 April 2017 10:52 AM GMT)
திருக்கனூரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் செல்போன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
திருக்கனூர்:
திருக்கனூர் காந்தி நகரை சேர்ந்தவர் முகமது அலி இவரது மகன் நூர்தீன் (வயது24). இவர் திருக்கனூரில் உள்ள செல்போன் கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
இவரும் அதே பகுதியில் மற்றொரு செல்போன் கடையில் வேலைபார்த்து வந்த திருவக்கரையை அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்த சுமன் (வயது21) என்பவரும் நண்பர்கள். நேற்று இரவு இருவரும் வேலை முடிந்து ஓரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
திருக்கனூர் கன்னிமார் கோவில் அருகே ஒரு திருப்பத்தில் திரும்பிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் அதிவேகமாக மோதியது.
இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து திருக்கனுர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நூர்தீனுக்கு நேற்று பிறந்த நாளாகும். பிறந்த நாளிலேயே நூர்தீன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருக்கனூர் காந்தி நகரை சேர்ந்தவர் முகமது அலி இவரது மகன் நூர்தீன் (வயது24). இவர் திருக்கனூரில் உள்ள செல்போன் கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
இவரும் அதே பகுதியில் மற்றொரு செல்போன் கடையில் வேலைபார்த்து வந்த திருவக்கரையை அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்த சுமன் (வயது21) என்பவரும் நண்பர்கள். நேற்று இரவு இருவரும் வேலை முடிந்து ஓரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
திருக்கனூர் கன்னிமார் கோவில் அருகே ஒரு திருப்பத்தில் திரும்பிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் அதிவேகமாக மோதியது.
இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து திருக்கனுர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நூர்தீனுக்கு நேற்று பிறந்த நாளாகும். பிறந்த நாளிலேயே நூர்தீன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X