என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு, புதுச்சேரியில் 3-ந்தேதி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு: கூட்டமைப்பு தலைவர் பேட்டி
Byமாலை மலர்30 March 2017 10:09 AM GMT (Updated: 30 March 2017 10:09 AM GMT)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.வேல் கூறினார்.
நாமக்கல்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேல் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அகில இந்திய சட்ட ஆணையத்தின் சட்ட திருத்த பரிந்துரைகள், வக்கீல்களின் உரிமைகளை பாதிக்கும் வகையிலும், வக்கீல்களை மிரட்டும் தோரணத்திலும் மற்றும் வக்கீல்கள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலையிலும் இருப்பதால், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அகில இந்திய பார் கவுன்சில் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த முடிவை ஏற்றுக் கொண்டு வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி (திங்கட் கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கூட்டமைப் பின் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
மேலும் அன்று அந்தந்த கோர்ட்டுகள் முன்பு நண்பகல் 12 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட உள்ளனர். வக்கீல்களின் தொழிலை பாதிக்கின்ற சட்ட பரிந்துரைகளை ஆணையம் திரும்ப பெறாவிட்டால், கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேல் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அகில இந்திய சட்ட ஆணையத்தின் சட்ட திருத்த பரிந்துரைகள், வக்கீல்களின் உரிமைகளை பாதிக்கும் வகையிலும், வக்கீல்களை மிரட்டும் தோரணத்திலும் மற்றும் வக்கீல்கள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலையிலும் இருப்பதால், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அகில இந்திய பார் கவுன்சில் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த முடிவை ஏற்றுக் கொண்டு வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி (திங்கட் கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கூட்டமைப் பின் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
மேலும் அன்று அந்தந்த கோர்ட்டுகள் முன்பு நண்பகல் 12 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட உள்ளனர். வக்கீல்களின் தொழிலை பாதிக்கின்ற சட்ட பரிந்துரைகளை ஆணையம் திரும்ப பெறாவிட்டால், கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X