என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் பிரசாரத்தில் தீபாவை கட்டி பிடித்து மகிழ்ந்த குடிசைப் பகுதி பெண்கள்
Byமாலை மலர்30 March 2017 9:49 AM GMT (Updated: 30 March 2017 9:49 AM GMT)
நேரு நகரில் உள்ள குடிசை பகுதிக்கு ஜெ.தீபா பிரசாரத்திற்கு சென்றபோது அங்குள்ள பெண்கள் அவரை பார்த்ததும், எங்கள் அம்மாவே (ஜெயலலிதா) வந்துட்டாங்க என்று கூறியபடி மகிழ்ச்சியில் கட்டி அணைத்து கொண்டனர்.
சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசார களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. முக்கிய கட்சி வேட்பாளர்கள் தெரு தெருவாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதுகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆதரவாளர்களும் கூட்டம் கூட்டமாக சென்று ஜெ.தீபாவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இன்று காலை ஜெ.தீபா தனது பிரசாரத்தை வைத்தியநாத அய்யர் பாலத்தில் இருந்து தொடங்கினார். வேனில் சென்ற அவர் குறுகலான சாலைகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
ஜெயலலிதா போல கைகூப்பி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.
நேரு நகரில் உள்ள குடிசை பகுதிக்கு ஜெ.தீபா சென்ற போது அங்குள்ள பெண்கள் அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் ஓடி வந்தனர். எங்கள் அம்மாவே (ஜெயலலிதா) வந்துட்டாங்க என்று கூறியபடி ஜெ. தீபாவை கட்டி அணைத்து கொண்டனர்.
அவர்களை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்ட தீபா புன்முறுவலுடன் ஆதரவு கேட்டார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு கேட்டார். அப்போது வீட்டு மாடிகளில் இருந்து பெண்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசார களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. முக்கிய கட்சி வேட்பாளர்கள் தெரு தெருவாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதுகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆதரவாளர்களும் கூட்டம் கூட்டமாக சென்று ஜெ.தீபாவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இன்று காலை ஜெ.தீபா தனது பிரசாரத்தை வைத்தியநாத அய்யர் பாலத்தில் இருந்து தொடங்கினார். வேனில் சென்ற அவர் குறுகலான சாலைகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
ஜெயலலிதா போல கைகூப்பி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.
நேரு நகரில் உள்ள குடிசை பகுதிக்கு ஜெ.தீபா சென்ற போது அங்குள்ள பெண்கள் அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் ஓடி வந்தனர். எங்கள் அம்மாவே (ஜெயலலிதா) வந்துட்டாங்க என்று கூறியபடி ஜெ. தீபாவை கட்டி அணைத்து கொண்டனர்.
அவர்களை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்ட தீபா புன்முறுவலுடன் ஆதரவு கேட்டார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு கேட்டார். அப்போது வீட்டு மாடிகளில் இருந்து பெண்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X