என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாரிமுனையில், மாணவர்கள் திடீர் மறியல்: 50 பேர் கைது
Byமாலை மலர்30 March 2017 7:59 AM GMT (Updated: 30 March 2017 7:59 AM GMT)
சென்னை பாரிமுனையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:
டெல்லியில் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மெரினாவிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாரிமுனையில் இன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறளகம் என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், அவர்களது பிரச்சனைக்கு உடனடியாக மத்திய- மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பாரிமுனையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை கோனியம்மன் கோவில் அருகில் இளைஞர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்திய 25 பேரை கைது செய்தனர்.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மைதானத்திற்குள் செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க அங்கு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மெரினாவிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாரிமுனையில் இன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறளகம் என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், அவர்களது பிரச்சனைக்கு உடனடியாக மத்திய- மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பாரிமுனையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை கோனியம்மன் கோவில் அருகில் இளைஞர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்திய 25 பேரை கைது செய்தனர்.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மைதானத்திற்குள் செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க அங்கு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X