search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
    X

    ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

    ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி இறந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    விழுப்புரம் மாவட்டம் அய்யனார்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது50).பெரியசாமி ஈரோட்டு வாய்க்கால்மேட்டில் உள்ள தனது தம்பி வீட்டில் தங்கி கரும்பு வெட்டும் கூலி வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பெரியசாமியும் அவருடன் வேலை பார்க்கும் குப்பன் என்பவரும் வேலையை முடித்து கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

    ஈரோடு-பெருந்துறை ரோடு வாய்க்கால்மேடு அருகே உள்ள மீன் கடைக்கு சென்று மீன் சாப்பிட்டு விட்டு வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் பெரியசாமி மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் பெரியசாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×