என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
ஈரோடு:
விழுப்புரம் மாவட்டம் அய்யனார்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது50).பெரியசாமி ஈரோட்டு வாய்க்கால்மேட்டில் உள்ள தனது தம்பி வீட்டில் தங்கி கரும்பு வெட்டும் கூலி வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பெரியசாமியும் அவருடன் வேலை பார்க்கும் குப்பன் என்பவரும் வேலையை முடித்து கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
ஈரோடு-பெருந்துறை ரோடு வாய்க்கால்மேடு அருகே உள்ள மீன் கடைக்கு சென்று மீன் சாப்பிட்டு விட்டு வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் பெரியசாமி மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் பெரியசாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்