search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிர் கருகியதால் மாரடைப்பால் விவசாயி பலி
    X

    பயிர் கருகியதால் மாரடைப்பால் விவசாயி பலி

    திருத்துறைப்பூண்டி அருகே பயிர் கருகிய வேதனையில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 71). விவசாயி.

    இவருக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்து இருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகின. மேலும் பயிர் பாதிப்புக்கான காப்பீடு தொகையும் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் கடன் அதிகமானதால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் தங்கராசு வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு வாசலில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கராசை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தங்கராசுக்கு ஆனந்தவள்ளி என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும் உள்ளனர்.

    Next Story
    ×