என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு சங்கம் சார்பில் விளையாட்டு போட்டிகள்
Byமாலை மலர்27 March 2017 5:26 PM GMT (Updated: 27 March 2017 5:26 PM GMT)
ஜெயங்கொண்டத்தில் போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு வளர்ப்பு சங்கத்தின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு வளர்ப்பு சங்கத்தின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன் தலைமை தாங்கினார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு சங்க மாநில பொது செயலாளர் முகமது ரபீக் வரவேற்றார். போட்டியினை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இறகுப்பந்து, 200 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகளில் அனை வரையும் உற்சாகப்படுத்துவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டார். போட்டிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், போலீஸ்- பொதுமக்கள் நட்புறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளுக்கு பாலா முருகன், விஜய ஆனந்தன், அசோக் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் மாசிலாமணி நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டத்தில் போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு வளர்ப்பு சங்கத்தின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன் தலைமை தாங்கினார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு சங்க மாநில பொது செயலாளர் முகமது ரபீக் வரவேற்றார். போட்டியினை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இறகுப்பந்து, 200 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகளில் அனை வரையும் உற்சாகப்படுத்துவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டார். போட்டிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், போலீஸ்- பொதுமக்கள் நட்புறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளுக்கு பாலா முருகன், விஜய ஆனந்தன், அசோக் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் மாசிலாமணி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X