search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனையில் நண்பர்களுடன் தகராறில் கல்லூரி மாணவருக்கு பிளேடு வெட்டு
    X

    திருபுவனையில் நண்பர்களுடன் தகராறில் கல்லூரி மாணவருக்கு பிளேடு வெட்டு

    திருபுவனையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவருக்கு பிளேடு வெட்டு விழுந்தது.

    திருபுவனை:

    திருபுவனை பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஜீவநாத் (வயது22). இவர் மதகடிப்பட்டில் உள்ள காமராஜர் அரசு கலைகல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை இவரும் அதே பகுதியை சேர்ந்த செல்லக்கண்ணு உள்பட 4 நண்பர்களுடன் அப்பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது செல்லக்கண்ணு உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து ஜீவநாத்தை பிளேடால் வெட்டினர்.

    இதில் முகத்தில் படுகாயம் அடைந்த ஜீவநாத் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவூதீன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×