என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
Byமாலை மலர்27 March 2017 11:30 AM GMT (Updated: 27 March 2017 11:30 AM GMT)
கும்பகோணத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவாமிமலை:
பல்கலைக்கழக நிதியை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கும்பகோணம் அரசு ஆண்கள் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.
மத்திய அரசின் பல்கலைக்கழக நிதி வழங்கும் குழுவின் சார்பில் 11, 12-வது திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். ஆனால் கடந்த 2011 முதல் 2016 வரையான நிதியை பொய்கணக்கு காட்டி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படவில்லை.
இந்த மோசடியால் 2011 முதல் 2016 வரை 18 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாணவர் கலையரசன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக நிதியை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கும்பகோணம் அரசு ஆண்கள் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.
மத்திய அரசின் பல்கலைக்கழக நிதி வழங்கும் குழுவின் சார்பில் 11, 12-வது திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். ஆனால் கடந்த 2011 முதல் 2016 வரையான நிதியை பொய்கணக்கு காட்டி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படவில்லை.
இந்த மோசடியால் 2011 முதல் 2016 வரை 18 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாணவர் கலையரசன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X