என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மயிலாடுதுறை அருகே பெண்னை தாக்கி நகை பறிப்பு
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் முடிகண்ட நல்லூர் உடையார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 65). இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
அப்போது பத்மாவதி தனியாக செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றனர். திடிரென அவர்கள் பத்மாவதியை தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர் திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.
இது குறித்து செம்பனார் கோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் இந்த பகுதியை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும் என்று போலீசார் விசாரணையில் தெரியவருகிறது.
அதிகாலையிலேயே பெண்னை தாக்கி திருட்டு சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்