search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் தனியார் விடுதியில் நகை வியாபாரியிடம் 27 பவுன், 80 ஜோடி வெள்ளி கொலுசுகள் அபேஸ்
    X

    ராமேசுவரம் தனியார் விடுதியில் நகை வியாபாரியிடம் 27 பவுன், 80 ஜோடி வெள்ளி கொலுசுகள் அபேஸ்

    ராமேசுவரம் தனியார் விடுதியில் நகை வியாபாரியிடம் 27 பவுன் தங்க நகைகள், 80 ஜோடி வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.
    ராமேசுவரம்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூ டவுன் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது37), நகை வியாபாரி. இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஆர்டர் எடுத்து நகை செய்து வழங்குவது வழக்கம்.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை ஆர்டரின்பேரில் தயார் செய்த பிரகாஷ், அவற்றை கொடுப்பதற்காக அங்கு சென்றார்.

    ராமேசுவரம் சென்ற அவர், அங்கு மேலரதவீதியில் உள்ள ஒரு தனியார் சத்திரத்தில் இரவில் தங்கினார். அப்போது தனது பையில் 27 பவுன் தங்க நகைகள், 80 ஜோடி வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை அருகே வைத்திருந்தார்.

    காலையில் கண் விழித்து பார்த்தபோது நகை பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், சத்திரம் முழுவதும் தேடினார். ஆனால் நகை பை கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ராமேசுவரம் நகர் போலீசில் பிரகாஷ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×