என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரம் தனியார் விடுதியில் நகை வியாபாரியிடம் 27 பவுன், 80 ஜோடி வெள்ளி கொலுசுகள் அபேஸ்
Byமாலை மலர்26 March 2017 5:19 AM GMT (Updated: 26 March 2017 5:19 AM GMT)
ராமேசுவரம் தனியார் விடுதியில் நகை வியாபாரியிடம் 27 பவுன் தங்க நகைகள், 80 ஜோடி வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.
ராமேசுவரம்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூ டவுன் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது37), நகை வியாபாரி. இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஆர்டர் எடுத்து நகை செய்து வழங்குவது வழக்கம்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை ஆர்டரின்பேரில் தயார் செய்த பிரகாஷ், அவற்றை கொடுப்பதற்காக அங்கு சென்றார்.
ராமேசுவரம் சென்ற அவர், அங்கு மேலரதவீதியில் உள்ள ஒரு தனியார் சத்திரத்தில் இரவில் தங்கினார். அப்போது தனது பையில் 27 பவுன் தங்க நகைகள், 80 ஜோடி வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை அருகே வைத்திருந்தார்.
காலையில் கண் விழித்து பார்த்தபோது நகை பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், சத்திரம் முழுவதும் தேடினார். ஆனால் நகை பை கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராமேசுவரம் நகர் போலீசில் பிரகாஷ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூ டவுன் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது37), நகை வியாபாரி. இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஆர்டர் எடுத்து நகை செய்து வழங்குவது வழக்கம்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை ஆர்டரின்பேரில் தயார் செய்த பிரகாஷ், அவற்றை கொடுப்பதற்காக அங்கு சென்றார்.
ராமேசுவரம் சென்ற அவர், அங்கு மேலரதவீதியில் உள்ள ஒரு தனியார் சத்திரத்தில் இரவில் தங்கினார். அப்போது தனது பையில் 27 பவுன் தங்க நகைகள், 80 ஜோடி வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை அருகே வைத்திருந்தார்.
காலையில் கண் விழித்து பார்த்தபோது நகை பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், சத்திரம் முழுவதும் தேடினார். ஆனால் நகை பை கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராமேசுவரம் நகர் போலீசில் பிரகாஷ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X