என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்.கே.நகரில் தி.மு.க. கூட்டணி சார்பில் 28-ந்தேதி பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்26 March 2017 3:11 AM GMT (Updated: 26 March 2017 3:11 AM GMT)
ஆர்.கே.நகரில் தி.மு.க. சார்பில் 28-ந்தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டு இருக்கிறாரே?
பதில்:- தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் ஏற்கனவே பலமுறை சொல்லி வலியுறுத்தி வந்திருக்கிறோம். தி.மு.க. சார்பாக எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதேபோல பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் ஆணையரை சந்தித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருக்கக்கூடிய ஜார்ஜை மாற்றிட வேண்டும், அதேபோல ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றிட வேண்டும் என்று எடுத்து வைத்த கோரிக்கை நியாயமானது என்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்த காரணத்தினால் தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது.
கேள்வி:- நீங்கள் எப்போது பிரசாரத்தை தொடங்க இருக்கிறீர்கள்?
பதில்:- தேர்தல் பிரசாரம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் 28-ம் தேதி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருக்கக்கூடிய எல்லா கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கக்கூடிய வகையில், ஒரு பொதுக்கூட்டம் ஆர்.கே. நகரில் நடைபெற இருக்கிறது.
கேள்வி:- ஆர்.கே.நகரில் பணப்பட்டு வாடா நடக்கிறது என்று மதுசூதனன் சொல்லி இருக்கிறார். தி.மு.க. சார்பாக இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படுமா?
பதில்:- இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். விரைவில் ஆதாரங்களோடு நாங்கள் இந்த செய்தியை மீண்டும் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்துவோம்.
கேள்வி:- பன்னீர்செல்வத்துடன் தி.மு.க. இணைந்து செயல்படுகிறது, அ.தி.மு.க.வை அழிப்பதற்கான முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு இருக்கிறது, எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டுள்ளர்கள் என்று டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அதாவது, தனக்கு ஒரு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக இப்படிப்பட்ட செய்திகளை சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தைத் தாழ்த்திக்கொள்ள என்றைக்கும் நான் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டு இருக்கிறாரே?
பதில்:- தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் ஏற்கனவே பலமுறை சொல்லி வலியுறுத்தி வந்திருக்கிறோம். தி.மு.க. சார்பாக எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதேபோல பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் ஆணையரை சந்தித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருக்கக்கூடிய ஜார்ஜை மாற்றிட வேண்டும், அதேபோல ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றிட வேண்டும் என்று எடுத்து வைத்த கோரிக்கை நியாயமானது என்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்த காரணத்தினால் தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது.
கேள்வி:- நீங்கள் எப்போது பிரசாரத்தை தொடங்க இருக்கிறீர்கள்?
பதில்:- தேர்தல் பிரசாரம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் 28-ம் தேதி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருக்கக்கூடிய எல்லா கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கக்கூடிய வகையில், ஒரு பொதுக்கூட்டம் ஆர்.கே. நகரில் நடைபெற இருக்கிறது.
கேள்வி:- ஆர்.கே.நகரில் பணப்பட்டு வாடா நடக்கிறது என்று மதுசூதனன் சொல்லி இருக்கிறார். தி.மு.க. சார்பாக இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படுமா?
பதில்:- இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். விரைவில் ஆதாரங்களோடு நாங்கள் இந்த செய்தியை மீண்டும் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்துவோம்.
கேள்வி:- பன்னீர்செல்வத்துடன் தி.மு.க. இணைந்து செயல்படுகிறது, அ.தி.மு.க.வை அழிப்பதற்கான முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு இருக்கிறது, எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டுள்ளர்கள் என்று டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அதாவது, தனக்கு ஒரு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக இப்படிப்பட்ட செய்திகளை சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தைத் தாழ்த்திக்கொள்ள என்றைக்கும் நான் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X