search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே இளம்பெண் மாயம்: போலீசில் புகார்
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே இளம்பெண் மாயம்: போலீசில் புகார்

    திருவெண்ணைநல்லூர் அருகே கடைக்கு செல்வதாக கூறி சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

    திருவெண்ணைநல்லூர்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரைச் சேர்ந்தவர் பூவராகவன். இவரது மகள் லாவண்யா (வயது 21). நர்சிங் படித்துள்ளார்.

    சம்பவத்தன்று லாவண்யா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.

    இது குறித்து லாவண்யாவின் தந்தை பூவராகவன் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மாயமான லாவண்யாவை தேடிவருகிறார்.

    Next Story
    ×