search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் மன்றத்துக்கு விருது: கலெக்டர் வழங்கினார்
    X

    காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் மன்றத்துக்கு விருது: கலெக்டர் வழங்கினார்

    காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தினருக்கு சிறந்த இளைஞர் மன்ற விருதினை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    காரியாபட்டி:

    நேரு யுவகேந்திராசார்பில் ஆண்டுதோறும், சிறப்பாக செயல்படும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இளைஞர் மன்றத்துக்கு விருது வழங்கப்படுகிறது. மாவட்ட சிறந்த இளைஞர் மன்றத்துக்கு விருது மற்றும் 25 ஆயிரம் ரூபாயும், மாநில விருதுக்கு ரூபாய் 1 லட்சமும், தேசிய விருதுக்கு 3 லட்சமும் வழங்கப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இளைஞர் மன்றத்திற்கு விருது வழங்குவதற்குநேரு யுவ கேந்திரா சார்பில் அறிவிப்பு வெளியானது. பல இளைஞர் மன்றங்கள் மாவட்ட விருதுக்கு விண்ணப்பித்தன.

    இதில் காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் அதிகசேவை செய்தமைக்காக மாவட்ட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்திற்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் 25 ஆயிரம் ரூபாய் காசோலையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    இதில் நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், கணக்காளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×