என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டுக்கு வறட்சி நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம்: வைகோ கண்டனம்
Byமாலை மலர்24 March 2017 2:51 AM GMT (Updated: 24 March 2017 2:51 AM GMT)
தமிழ்நாட்டுக்கு வறட்சி நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது அநீதியாகும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்ததாக தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில்கொண்டு மத்திய அரசு ரூ.39 ஆயிரத்து 565 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழகத்தில் வறட்சி நிலையை நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழு, வெறும் ரூ.2,096.80 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது வேதனை தருகிறது. இது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை அமைத்து, காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையைச் செய்யாமல் வஞ்சித்த மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வறட்சி நிதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவது அநீதியாகும்.
மத்தியக் குழுவின் பரிந்துரையை பரிசீலனைக்கு ஏற்காமல், உடனடியாக தமிழக அரசு வைத்த கோரிக்கையின்படி ரூ.39 ஆயிரத்து 565 கோடி வறட்சி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்ததாக தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில்கொண்டு மத்திய அரசு ரூ.39 ஆயிரத்து 565 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழகத்தில் வறட்சி நிலையை நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழு, வெறும் ரூ.2,096.80 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது வேதனை தருகிறது. இது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை அமைத்து, காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையைச் செய்யாமல் வஞ்சித்த மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வறட்சி நிதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவது அநீதியாகும்.
மத்தியக் குழுவின் பரிந்துரையை பரிசீலனைக்கு ஏற்காமல், உடனடியாக தமிழக அரசு வைத்த கோரிக்கையின்படி ரூ.39 ஆயிரத்து 565 கோடி வறட்சி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X