என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
26 தமிழக மீனவர்கள், 131 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு பழனிசாமி கடிதம்
Byமாலை மலர்24 March 2017 2:14 AM GMT (Updated: 24 March 2017 2:14 AM GMT)
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 26 தமிழக மீனவர்கள் மற்றும் 131 படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2 மீன்பிடி படகுகளில் சென்ற 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் 22-ந் தேதி கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து எந்திரப்படகில் சென்ற 8 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து ஒரு மீன்பிடி படகில் சென்ற 8 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் நிலைப்பாடு இன்னும் தொடர்கதையாக உள்ளது. கைப்பற்றப்படும் மீன்பிடி படகுகளை விடுவிக்காமல், அந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை தடுத்து அவர்களின் குடும்பங்களை நிர்க்கதிக்கு ஆளாக்கும் இலங்கை அரசின் நிலைப்பாடும் தொடர்கிறது.
இதனால் தமிழக மீனவர்களின் மத்தியில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் உடனே தலையிட்டு, இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசி மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை கைது செய்யப்பட்டு ள்ள 26 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 131 படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2 மீன்பிடி படகுகளில் சென்ற 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் 22-ந் தேதி கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து எந்திரப்படகில் சென்ற 8 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து ஒரு மீன்பிடி படகில் சென்ற 8 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் நிலைப்பாடு இன்னும் தொடர்கதையாக உள்ளது. கைப்பற்றப்படும் மீன்பிடி படகுகளை விடுவிக்காமல், அந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை தடுத்து அவர்களின் குடும்பங்களை நிர்க்கதிக்கு ஆளாக்கும் இலங்கை அரசின் நிலைப்பாடும் தொடர்கிறது.
இதனால் தமிழக மீனவர்களின் மத்தியில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் உடனே தலையிட்டு, இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசி மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை கைது செய்யப்பட்டு ள்ள 26 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 131 படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X