search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் 4 ஆயிரம் மாணவர்கள் இணைந்தனர்
    X

    டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் 4 ஆயிரம் மாணவர்கள் இணைந்தனர்

    டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் 4 ஆயிரம் மாணவர்களும், ஜெ.தீபா பேரவை நிர்வாகிகளும் இணைந்தனர்.
    சென்னை:

    டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் 4 ஆயிரம் மாணவர்களும், ஜெ.தீபா பேரவை நிர்வாகிகளும் இணைந்தனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், தமிழக விவசாயிகள் கட்சியின் மாநில தலைவர் கே.ராமராஜன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை நிறுவன தலைவர் மீன்சுருட்டி வி.ஜி. சிற்றரசு தேவை தலைமையில் பாசறை நிர்வாகிகளும், அனைத்திந்திய விவசாய- தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே. விவசாயமணி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும், பசும்பொன் தேசிய கழகத் தலைவர் என்.ஜோதி முத்துராமலிங்க தேவர் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளும், வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த எம்.சவுந்தரபாண்டியன் ஏற்பாட்டின் பேரில், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் பேரவையின் 17 மாவட்ட நிர்வாகிகளும் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை நேற்று நேரில் சந்தித்து ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் பெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க. வுக்கு தங்களுடைய ஆதரவையும் அளித்தனர்.


    சென்னையில் உள்ள அரசு சட்டக்கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, திருத்தங்கல் நாடார் கல்லூரி, குரு நானக் கல்லூரி, ஏ.எம். ஜெயின் கல்லூரி, எஸ்.ஏ.பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.

    முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஏற்பாட்டின் பேரில் எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை நா.வெங்கட்ராஜ், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.நிஜாம், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓம்.குமார் உள்பட 11 பேர் அந்த பேரவையில் இருந்து விலகியும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டின் பேரில் திருப்பரங்குன்றம் தொகுதி தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.கே.டி.ராஜா உள்பட தே.மு.தி.க.வை சேர்ந்த 100 நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியும் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×