என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பாரதீய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்20 March 2017 1:14 PM GMT (Updated: 20 March 2017 1:14 PM GMT)
குமரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பாரதீய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குழித்துறை:
குமரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை ஆழப்படுத்த வேண்டும், நீர் ஆதாரங்களை தூர்வாரி அதிகளவு தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பாரதீய ஜனதா சார்பில் இன்று குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குழித்துறை நகரம் மற்றும் மேல்புறம் ஒன்றிய பாரதீய ஜனதா சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை தலைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் குழித்துறை நகர தலைவர் பக்தசிங், முன்னாள் கவுன்சிலர்கள் ரெத்தினமணி, பிஜு உள்பட திரளான பாரதீய ஜனதாவினர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை ஆழப்படுத்த வேண்டும், நீர் ஆதாரங்களை தூர்வாரி அதிகளவு தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பாரதீய ஜனதா சார்பில் இன்று குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குழித்துறை நகரம் மற்றும் மேல்புறம் ஒன்றிய பாரதீய ஜனதா சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை தலைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் குழித்துறை நகர தலைவர் பக்தசிங், முன்னாள் கவுன்சிலர்கள் ரெத்தினமணி, பிஜு உள்பட திரளான பாரதீய ஜனதாவினர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X