என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாரமங்கலம் அருகே சுவரில் வேன் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்20 March 2017 11:54 AM GMT (Updated: 20 March 2017 11:54 AM GMT)
தாரமங்கலம் அருகே சுவரில் வேன் மோதிய வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 2 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர வார்டில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி, கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர் (வயது 25), சரவண குமார் (வயது 28), ஜெய சங்கர்(36). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.
விசைத்தறி தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நேற்று ஒரு வேனில் மேச்சேரியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அதே வேனில் 3 பேரும் நள்ளிரவில் வீடு திரும்பினார்கள்.
அந்த வேனை ஜெயசங்கர் ஓட்டினார். அதிகாலை 3.30 மணி அளவில் வேன் தாரமங்கலம் அருகே உள்ள தேவகனுர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென சாலையின் ஓரத்தில் இருந்த காம்பவுண்டு சுவரில் பயங்கரமாக மோதியது.
இதனால் காம்பவுண்டு சுவர் உடைந்து கீழே விழுந்தது. இது காங்கிரீட்டால் ஆன சுவர் என்பதால் மோதிய வேகத்தில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் வேனை ஓட்டிய ஜெயசங்கர் மற்றும் வேனுக்குள் இருந்த சுந்தர், சரவணகுமார் ஆகிய 3 பேரும் தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சுந்தர் பரிதாபமாக இறந்தார்.
சரவண குமார் மற்றும் ஜெயசங்கர் ஆகிய இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர வார்டில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்போது முதற்கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி, கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர் (வயது 25), சரவண குமார் (வயது 28), ஜெய சங்கர்(36). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.
விசைத்தறி தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நேற்று ஒரு வேனில் மேச்சேரியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அதே வேனில் 3 பேரும் நள்ளிரவில் வீடு திரும்பினார்கள்.
அந்த வேனை ஜெயசங்கர் ஓட்டினார். அதிகாலை 3.30 மணி அளவில் வேன் தாரமங்கலம் அருகே உள்ள தேவகனுர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென சாலையின் ஓரத்தில் இருந்த காம்பவுண்டு சுவரில் பயங்கரமாக மோதியது.
இதனால் காம்பவுண்டு சுவர் உடைந்து கீழே விழுந்தது. இது காங்கிரீட்டால் ஆன சுவர் என்பதால் மோதிய வேகத்தில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் வேனை ஓட்டிய ஜெயசங்கர் மற்றும் வேனுக்குள் இருந்த சுந்தர், சரவணகுமார் ஆகிய 3 பேரும் தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சுந்தர் பரிதாபமாக இறந்தார்.
சரவண குமார் மற்றும் ஜெயசங்கர் ஆகிய இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர வார்டில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்போது முதற்கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X