search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொடக்குறிச்சி அருகே குடிப்பதை தட்டி கேட்டதால் வாலிபர் தற்கொலை
    X

    மொடக்குறிச்சி அருகே குடிப்பதை தட்டி கேட்டதால் வாலிபர் தற்கொலை

    மொடக்குறிச்சி அருகே குடிப்பழக்கத்தை வீட்டில் உள்ளவர்கள் தட்டி கேட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த 46 புதூர் முத்துக்கவுண்டன் பாளையம், பெரியார்நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் குணா என்கிற எஸ்ரா (வயது19).

    குணாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் குணா சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று குணா குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. நேராக தனது படுக்கையறைக்கு சென்று படுக்க சென்று விட்டார்.

    மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கபடாததால் சந்தேகம் அடைந்த குணாவின் தந்தை கதவை தட்டியுள்ளார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவுயுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறையில் குணா தூக்குபோட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர் குணா வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×