என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாதி கொடுமையை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: தா.பாண்டியன்
Byமாலை மலர்20 March 2017 11:20 AM GMT (Updated: 20 March 2017 11:20 AM GMT)
சாதி கொடுமையை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறினார்.
சேலம்:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர் முத்துகிருஷ்ணன் இழப்பு பேரிழப்பாகும். இது போன்ற மரணம் கண்டிக்கதக்கது. சாதிய கொடுமையை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். நேற்று இன்று இந்த பிரச்சனை இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலை இருக்கிறது.
ஆதிக்க சக்திகள் துணிச்சலோடு இந்த பிரச்சனையை செய்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு காவலர்களை நம்பி பலன் இல்லை. அவர்களும் இதுபோல் பாதிக்கப்படுகிறார்கள்.
இங்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை அவமானப்படுத்தியது தமிழகத்திற்கே அவமானம். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை என்பதை நான் மீடியாக்களை பார்த்து தெரிந்து கொண்டேன். இது தான் எங்கள் நிலை.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர் முத்துகிருஷ்ணன் இழப்பு பேரிழப்பாகும். இது போன்ற மரணம் கண்டிக்கதக்கது. சாதிய கொடுமையை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். நேற்று இன்று இந்த பிரச்சனை இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலை இருக்கிறது.
ஆதிக்க சக்திகள் துணிச்சலோடு இந்த பிரச்சனையை செய்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு காவலர்களை நம்பி பலன் இல்லை. அவர்களும் இதுபோல் பாதிக்கப்படுகிறார்கள்.
இங்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை அவமானப்படுத்தியது தமிழகத்திற்கே அவமானம். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை என்பதை நான் மீடியாக்களை பார்த்து தெரிந்து கொண்டேன். இது தான் எங்கள் நிலை.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X