search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
    X

    திருச்சியில் லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலி

    திருச்சியில் இன்று காலை லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 13 பேரும் காயம் ஏற்பட்டது.
    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள ஆலம்பட்டிபுதூரை சேர்ந்த 14 பேர் சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவிற்கு சென்றனர். விழாவில் பங்கேற்று விட்டு இன்று காலை லோடு ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டனர். ஆட்டோவை ஆலம்பட்டி புதூரை சேர்ந்த ராஜா ஓட்டினார்.

    திருச்சி மன்னார்புரம் மேம்பாலம் வழியாக ராஜ ராஜநகர் அருகே திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் செல்லும்போது திடீரென லோடு ஆட்டோ நிலை தடுமாறியது. பின்னர் அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி (வயது 35) என்பவர் இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×