என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
Byமாலை மலர்20 March 2017 10:52 AM GMT (Updated: 20 March 2017 10:52 AM GMT)
திருச்சியில் இன்று காலை லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 13 பேரும் காயம் ஏற்பட்டது.
திருச்சி:
திருச்சி அருகே உள்ள ஆலம்பட்டிபுதூரை சேர்ந்த 14 பேர் சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவிற்கு சென்றனர். விழாவில் பங்கேற்று விட்டு இன்று காலை லோடு ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டனர். ஆட்டோவை ஆலம்பட்டி புதூரை சேர்ந்த ராஜா ஓட்டினார்.
திருச்சி மன்னார்புரம் மேம்பாலம் வழியாக ராஜ ராஜநகர் அருகே திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் செல்லும்போது திடீரென லோடு ஆட்டோ நிலை தடுமாறியது. பின்னர் அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி (வயது 35) என்பவர் இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே உள்ள ஆலம்பட்டிபுதூரை சேர்ந்த 14 பேர் சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவிற்கு சென்றனர். விழாவில் பங்கேற்று விட்டு இன்று காலை லோடு ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டனர். ஆட்டோவை ஆலம்பட்டி புதூரை சேர்ந்த ராஜா ஓட்டினார்.
திருச்சி மன்னார்புரம் மேம்பாலம் வழியாக ராஜ ராஜநகர் அருகே திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் செல்லும்போது திடீரென லோடு ஆட்டோ நிலை தடுமாறியது. பின்னர் அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி (வயது 35) என்பவர் இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X