என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணத்தில் இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
Byமாலை மலர்20 March 2017 10:47 AM GMT (Updated: 20 March 2017 10:47 AM GMT)
காவேரிப்பட்டணத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(27). இவரது மனைவி ரம்யா(23). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை எதுவும் இல்லை. இதனால் கணவன், மனைவியிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்கியடைந்த ரம்யா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ரம்யா காலை வீட்டில் இருந்த விவசாய பயன்பாட்டுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் ரம்யாவை உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ரம்யா இறந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(27). இவரது மனைவி ரம்யா(23). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை எதுவும் இல்லை. இதனால் கணவன், மனைவியிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்கியடைந்த ரம்யா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ரம்யா காலை வீட்டில் இருந்த விவசாய பயன்பாட்டுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் ரம்யாவை உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ரம்யா இறந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X