search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவேரிப்பட்டணத்தில் இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
    X

    காவேரிப்பட்டணத்தில் இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

    காவேரிப்பட்டணத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(27). இவரது மனைவி ரம்யா(23). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை எதுவும் இல்லை. இதனால் கணவன், மனைவியிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்கியடைந்த ரம்யா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ரம்யா காலை வீட்டில் இருந்த விவசாய பயன்பாட்டுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் ரம்யாவை உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ரம்யா இறந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×