என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அழகப்பன் நகரில் அரசு பஸ்சில் சிக்கி வாலிபர் பலி: டிரைவர் கைது
Byமாலை மலர்20 March 2017 10:09 AM GMT (Updated: 20 March 2017 10:09 AM GMT)
மதுரை மோட்டார் சைக்கிள் விபத்தில் கீழே விழுந்த வாலிபர், அரசு பஸ்சில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை பைக்காரா புது மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் வசந்த் (வயது 21). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அழகப்பன் ரெயில்வே கேட் அருகில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், வசந்த் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய வசந்த் கீழே விழுந்தார். அப்போது அந்த வழி யாக வந்த அரசு பஸ், கண்இமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி வசந்த் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X