என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் அருகே குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்: தொழிலாளி கைது
Byமாலை மலர்20 March 2017 9:55 AM GMT (Updated: 20 March 2017 9:55 AM GMT)
ஆலங்குளம் அருகே குடிபோதையில் மகளிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை இந்திரா காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 36). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
மகேந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்து சென்ற முத்துமாரி அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் மகேந்திரனுடன் இருந்தனர்.
சம்பவத்தன்று மகேந்திரன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்தாள். போதை தலைக்கேறிய நிலையில் நிதானம் தவறிய மகேந்திரன் மகள் என்றும் பாராமல் அவளிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அலறி அடித்துக் கொண்டு தனது தாய் முத்துமாரியிடம் ஓடிச்சென்று நடந்ததை கூறினாள். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முத்துமாரி புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீ சார் மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை இந்திரா காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 36). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
மகேந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்து சென்ற முத்துமாரி அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் மகேந்திரனுடன் இருந்தனர்.
சம்பவத்தன்று மகேந்திரன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்தாள். போதை தலைக்கேறிய நிலையில் நிதானம் தவறிய மகேந்திரன் மகள் என்றும் பாராமல் அவளிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அலறி அடித்துக் கொண்டு தனது தாய் முத்துமாரியிடம் ஓடிச்சென்று நடந்ததை கூறினாள். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முத்துமாரி புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீ சார் மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X