search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் காதல் திருமணம் செய்தபெண் தீக்குளித்து தற்கொலை
    X

    மதுரையில் காதல் திருமணம் செய்தபெண் தீக்குளித்து தற்கொலை

    மதுரையில் காதல் திருமணம் செய்தபெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் சந்தியாகு. இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது.

    சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×