என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மீனவர் சுட்டுக்கொலை: சர்வதேச போலீஸ் மூலம் இலங்கை கடற்படை வீரரை கைது செய்ய வேண்டும்- அன்புமணி
அவனியாபுரம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு ரூ1 கோடியும், காயம் அடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் நிதி உதவி வழங்க வேண்டும்.
இந்த சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் பேச உள்ளேன். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேச உள்ளேன். கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமானதாகும். இதற்கான ஆவணங்கள் உள்ளன.
1974-ல் போடப்பட்ட இந்திராகாந்தி- பண்டார நாயகா ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வு எடுக்கவும், வலைகளை உலர வைக்கவும் உரிமம் உள்ளது.
அப்போது நடைபெற்ற தி.மு.க. ஆட்சி காலத்தில் இதற்கு பெயரளவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்போது இந்திரா காந்தியும் தி.மு.க. அரசை மிரட்டி உள்ளார்.
இப்போதைய மோடி அரசு, கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கையை தட்டிக் கேட்க பலம் இல்லையா? என்பது தெரியவில்லை. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தற்போது திருமங்கலம் பார்முலா உருவாகி உள்ளது.
ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரர் மீது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சர்வதேச போலீஸ் மூலம் அந்த வீரரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்